இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தென் கொரிய பிரதமர் சுங் சை-கியுன் ஆகியோரிடையே தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாக்கிழமை காலை இடம்பெற்றது.
இதன்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்தல், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
தென் கொரிய பிரதமர் சுங் சை-கியுன் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சமீபத்தில் முடிவடைந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ராஜபக்ச வெற்றி பெற்றதற்கு தென் கொரிய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக பிரதமர் சுங் கூறினார்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) ஊடாக இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்துக்கு தென் கொரிய ஏற்கனவே உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கான மேலதிக தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அத்துடன், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புக் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
தொற்று நோய் நெருக்கடி இயல்புக்கு வந்ததும் இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரியர்களை ஊக்குவிக்குமாறு இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.
அத்துடன், கோவிட் -19 நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் இலங்கைக்கு வருகை தருமாறு தென் கொரிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை